சனி, 27 செப்டம்பர், 2025

நீருக்கு நன்றி

27.09.2025 சனிக்கிழமை 



இன்று என் வாழ்க்கையில் முதன்முறையாக நன்றி எனும் உணர்வை உணரவும் வெளிப்படுத்தவும் துவங்கியுள்ளேன். இதற்கு காரணமானவர்களுக்கு முதலில் என் நன்றி🙏💕


நான் நீருக்கு நன்றி என்ற அழகான பதத்தை குரு மித்ரேஷிவா அவர்களின் வகுப்பில் தான் முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். அவருக்கு இத்தருணத்தில் எனது நன்றி. 


மூன்று பக்கமும் கடலெனும் நீரால் சூழப்பட்ட துதான் உலகம். இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் உணவே நீர் தான். அதுமட்டுமல்ல எல்லா உயிரினமும் நீரை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு தான் தத்தம் ஜனனம் எடுக்கின்றது. அதனால் தான் "நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவன் வகுத்துரைத்தான். 


தாயின் கருவறையில் உருவாக, கருக்கொண்ட நாள் முதல் இன்று வரை என்னை வாழ்வித்த நீருக்கு நன்றி. அதுமட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும்.... என்னுடைய இறுதி நாளிலும்கூட நீரின்தேவை அவசியம் தேவையாகிறது என்பதையும் மனப்பூர்வமாக உணருகிறேன். அத்தகைய நீருக்கு நன்றி. 


நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕நன்றி🙏💕


நன்றி

🙏


கருத்துகள் இல்லை:

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...