மாமண்டூர்
மாமண்டூர் என்று கூறியதும் நம் நினைவுக்கு வருவது சிற்பக் கலை தான். ஆனால் இந்த ஊர்ப் பெயரில் உள்ள ஒரு சொல் இன்று அறிவிலி எனும் பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆம், அந்த சொல் மண்டு என்பது தான். அறிவில்லாத எனும் பொருளில் வழங்கப்பட்டு வரும் இச்சொல்லுக்கு என்ன பொருள்?
மண்டு — மண்டுதல் என்பது அதன் தொழிற்பெயர் ஆகும். மண்டுதல் என்றால் நிரம்பியிருத்தல் என்று பொருள்.
உதாரணமாக
வீட்டில் சாம்பிராணி புகை மூட்டுகிறோம். அப்போது வீடு முழுவதும் புகை மண்டும் என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதேபோல் நிறைய பால் அருந்தும் குழந்தைகளைக் கேலியாக நல்லா ஒரு படிப்பாலை மண்டுகிறது என்று கூறுவது வழக்கம்.
ஆக மண்டு என்றால் நிரம்பி இருத்தல் என்பது பொருள். மாமண்டூர் என்னும் ஊர் பெயர் உருவாகக் காரணம், அறிவுடையோர் நிறைய பேர் நிரம்பியிருந்த ஊர் என்பதால் அப்பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது.
இப்படி அறிவால், ஏதேனும் பொருளால் நிரம்பியிருத்தல் என்னும் பொருள் தரக்கூடிய சொல்லை அறிவிலி என்ற பொருள் தரக்கூடிய சொல்லாகப் பயன்படுத்துவது வேதனை தருகிறது.




