திங்கள், 21 ஜூன், 2021

நல்ல தமிழ்ச் சொற்கள் — 3

மாமண்டூர்



மாமண்டூர் என்று கூறியதும் நம் நினைவுக்கு வருவது சிற்பக் கலை தான். ஆனால் இந்த ஊர்ப் பெயரில் உள்ள ஒரு சொல் இன்று அறிவிலி எனும் பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆம், அந்த சொல் மண்டு என்பது தான். அறிவில்லாத எனும் பொருளில் வழங்கப்பட்டு வரும் இச்சொல்லுக்கு என்ன பொருள்?

மண்டு — மண்டுதல் என்பது அதன் தொழிற்பெயர் ஆகும். மண்டுதல் என்றால் நிரம்பியிருத்தல்  என்று பொருள்.

உதாரணமாக

வீட்டில் சாம்பிராணி புகை மூட்டுகிறோம். அப்போது வீடு முழுவதும் புகை மண்டும் என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

இதேபோல் நிறைய பால் அருந்தும் குழந்தைகளைக் கேலியாக நல்லா ஒரு படிப்பாலை மண்டுகிறது என்று கூறுவது வழக்கம்.

ஆக மண்டு என்றால் நிரம்பி இருத்தல் என்பது பொருள். மாமண்டூர் என்னும் ஊர் பெயர் உருவாகக் காரணம், அறிவுடையோர் நிறைய பேர் நிரம்பியிருந்த ஊர் என்பதால் அப்பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது.

இப்படி அறிவால், ஏதேனும் பொருளால் நிரம்பியிருத்தல் என்னும் பொருள் தரக்கூடிய சொல்லை அறிவிலி என்ற பொருள் தரக்கூடிய சொல்லாகப் பயன்படுத்துவது வேதனை தருகிறது.

காப்புமாறி


மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி நிலம். இக் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் குறவர் என்றழைக்கப்பட்டனர்.
இவர்கள் சமவெளிப் பகுதிகளில் பயிர் செய்து வாழ்ந்தனர். அவ்வாறு பயிர் செய்து வாழும் இவர்கள் பயிரினைக் காவல் காக்கும் தொழிலையும் செய்து வந்தனர். இக்காவல் செய்யும் தொழிலை இரவு பகல் என்று இரண்டு வேளைகளிலும் மாறி மாறி காவல் புரிந்து அத்தொழிலை செய்து வந்தனர். இங்ஙனம் இரவு பகல் என்று இருவேளைகளிலும் மாறி மாறி காப்பு செய்ததால் காப்பு மாறி என்று அத்தொழிலை செய்வோர்  அழைக்கப்பட்டனர். காப்பு மாறி என்ற சொல்லானது இன்று கேப்மாரி என்னும் ஏசுதல் பொருளில் வழங்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியது.

தொடரும்....

செவ்வாய், 8 ஜூன், 2021

நல்ல தமிழ்ச் சொற்கள் — 2

மடை

ஏரி குளம் கண்மாய்களில் நீரைத் தேக்கி வைத்து விவசாயத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் பொழுது அந்த நீரை திறந்து விடுவதற்காக அமைக்கப்பட்ட சிறிய வாசல் போன்ற பகுதி அமைப்பதுண்டு. அவருக்கு கதவும் உண்டு. இக் கதவு மறுத்தாலோ அல்லது இரும்பினால் செய்யப்பட்டு இருக்கும். அந்த சிறிய துவாரத்திற்கு மடை என்று பெயர். 

மழைக்காலத்தில் இந்த மடையின் கதவினைத் திறப்பதற்கென்றே சிலர் நியமிக்கப்பட்டிருப்பர். அவர்கள் படையைத் திறப்பவர்கள் என்பதால், அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்.

இத்தகைய தொழிற் பெயராக விளங்கக்கூடிய மடையன், மடையர் எனும் சொற்கள் இன்று அறிவில்லாதவர், மூளை இல்லாதவர், அறிவைப் பயன்படுத்தாதவர், மூளையைப்  பயன்படுத்தாதவர் என்னும் பொருளைக் குறிக்க கூடிய சொல்லாக மாறி வழங்கப்படுகின்றது. 



முட்டுக்கட்டை

பொதுவாக ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதற்கு யாராவது தடைக்கற்களாக இருந்தார்கள் என்றால், ஏன் முட்டுக்கட்டையாக இருக்கிறாய் என்று கேட்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அத்தகைய முட்டுக்கட்டை என்பது என்ன? திருவிழாக்காலங்களில் தேர் இழுப்பது வழக்கம். இந்தத்தேர் தெருவிலே நிதானமாகவும் தடம் புரளாமலும் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய கட்டைக்கு முட்டுக்கட்டை என்று பெயர். தேரானது தெருவிலே திரும்பும்பொழுது தேரின் சக்கரத்தில் ஒரு கட்டையைக் கொடுத்து அதனை லாவகமாகத் திருப்புவதற்கு முயற்சி செய்வார்கள். அவ்வாறு தேரைத் திருப்புவதற்குப் பயன்படுத்தக்கூடிய கட்டைக்கு முட்டுக்கட்டை என்றும்; 



அந்தக் கட்டையைக் கொடுத்து லாவகமாகத் தேர் திரும்புவதற்கு உதவியாக இருக்கக்கூடிய நபருக்கு முட்டாள் (முட்டுக்கொடுக்கும் ஆள்) என்றும் பெயர். ஆனால் இன்று முட்டாள் என்னும் சொல்லானது அறிவில்லாதவன், மூளை இல்லாதவன் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கின்றது. காரணம் முட்டுக்கொடுக்கும் ஆள் தேரினுடைய ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் மிகவும் சாதுரியமாக அந்தக் கட்டையை வைத்து அது சரியான பாதையில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முதலில் அந்த நபருக்கு உடல் பலமும் அறிவுத் திறனும் இருக்க வேண்டும். அந்நபர் புத்திசாலியாக இருந்தால் தான் அவரால் தேரை சரியான தடத்தில் செல்ல வைக்க முடியும். ஆனால் இன்று இவ்வரிய சொல்லானது பொருள் மாறிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது வருத்தத்துக்குரியது.



தொடரும்.,


நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...